பிரதமர், முதல்வர் மேல இல்லாத குற்றச்சாட்டா?… விஜயபாஸ்கர் தந்தை பரபரப்பு பேட்டி!

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பொறுப்பு வகித்த போது, திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய மருத்துவமனை துவங்க தகுதியானது என சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி வீட்டிற்கு வெளியே வந்து பேசும்பொழுது:

முன்னாள் சுதந்திரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வரப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் வீட்டில் எந்தவித ஆவணங்களும் இதுவரை எடுக்கவில்லை என்றும் தன்னிடம் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் முறைகேடாக சான்றிதழ் வழங்கியதன் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறதே என்று கேட்டதற்கு அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் பல்வேறு சான்றிதழ்களை வழங்கி இருப்பார் அது எதற்காக என்று தெரியவில்லை எனத் தெரிவித்த அவர், பிரதமர் மீதும், ஸ்டாலின் மீதும் கூட தான் குற்றச்சாட்டுகள் உள்ளன. நீதிமன்றம் தான் குற்றம் செய்தார்களா இல்லையா என்று உறுதி செய்யும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *