ஏமாற்றிய என்.எல்.சியே, எங்கள் மண்ணை விட்டு ஓடி போ… அன்புமணி அதிரடி

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக ஆக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவையில்லை என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து  மூடி விட்டு செல்லுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்சிகேட் அருகே நடைபெற்றது

 அப்போது அவர் கண்டன கோஷம் எழுப்பி பின்னர் பேசியதாவது:

என்.எல்.சி நிறுவனம் 1956-ல் 44 கிராமத்தை வெளியேற்றி 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. அப்போது  வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை மாற்ற குடியிருப்பு வழங்குவதாக என்.எல்.சி நிறுவனம் கூறினர் ஆனால் என்.எல்.சி நிறுவனம் இதுவரை செய்யவில்லை 66 ஆண்டு காலமாகவும் மக்களை ஏமாற்றி வருகிறது 

என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்துள்ளது நாங்கள் ஒருபிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம் என்எல்சி நிறுவனம்  11,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது ஆண்டு லாபம் மட்டும் 2400 கோடி ரூபாய் ஆனால் இந்த என்.எல்.சி நிறுவனம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை ஆகையால் இந்த எல்.எல்.சி நிறுவனம் மூடிவிட்டு எங்கள் மண்ணை விட்டு போ

 ஆசியா நாட்டிலேயே தன்னூற்றுப் பகுதி நெய்வேலி பகுதி இங்கு 8அடி தோன்றினாள் நீர் கிடைக்கும் தற்போது ஆயிரம் அடி தோண்னினால் தான் தண்ணீர் கிடைக்கிறது இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புகின்ற இந்த என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் தேவை இல்லை

 நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி நிறுவனம் நிரந்தர வேலை தராமல் ஒப்பந்த அடிப்படையில் வேலை தருகின்றனர் அவர்கள் எல்லாம் தற்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் தள்ளப்பட்டுள்ளனர்

 என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்பட்ட லாபம் அனைத்தும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் முதலீடு செய்கின்றனர் நம் மண்ணின் மக்களுக்கு எதுவும் செய்யாமல் அகதியாக பார்க்கும் இந்த என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை

அண்மையில் 299 பொறியாளர்களை என்.எல்.சி  நிறுவனம் நியமனம்  செய்ய அறிவிப்பு வெளியிட்டது அதில் ஒரு தமிழர் கூட இல்லை நிலம் கொடுத்த தமிழனுக்கு வேலையில்லை அதனால் என்.எல்.சி நிறுவனத்திற்கு  பூட்டு போடுவோம் என்று இவ்வாறு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *