தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது: ஐகோர் அதிரடி உத்தரவு!!

கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி பொதுக்குழு நடைபெறுவதை தடைவிதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள் நீங்கள் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே நாட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணையானது நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வந்த்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிரடி தீர்ப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *