கர்நாடகாவில் களம் காண தயாராகும் அமித்ஷா..!! அதிர்ச்சி தரும் பின்னணி..!!
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தென் மாநிலங்களில் இங்கு மட்டுமே பா.ஜ.க ஆட்சியில் உள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக உள்ளது.
வரும் தேர்தலில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, பா.ஜ.க தலைமை ஒரு ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதன் முடிவு கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவது சந்தேகம் என்றும் காங்கிரசுக்கு அதிக சீட் கிடைத்து ஆட்சி அமைக்கலாம்’ என, சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்த சர்வே கிடைத்தவுடன், அமித் ஷா ஒரு திட்டம் தயார் செய்துவிட்டாராம். இந்த சர்வேயில், எந்தெந்த தொகுதிகளில் பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதையும் எங்கு கட்சி பலவீனமாக உள்ளது எனக் கண்டுபிடிக்க அமித்ஷா ஒரு லிஸ்ட் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தொகுதிகளில் அவரும், பிரதமர் மோடியும் களம் இறங்க போகின்றனராம். மோடி பிரசாரம் செய்ய முடியாத தொகுதிகளில் அமித்ஷா பிரசாரம் செய்வார். தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தான் நடக்கவிருக்கிறது என்றாலும், இப்போதிருந்தே இந்த பலவீனமான தொகுதிகளில் பா.ஜ.க கட்சியினர் வேலையை துவங்கிவிட்டனர். பா.ஜ.கவை தோற்கடிக்க காங்கிரசும் களம் இறங்க உள்ளது.