வீசப்பட்ட செருப்பு பாதுகாப்பாக இருக்கும் – நிதியமைச்ச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் உயிரிழந்தார்.
அவரது உடலை நேற்று மதுரை விமான நிலையத்திற்க்கு கொண்டுவரப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னால் ஆதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் உட்பட ஏராளமானோர் இறந்த இரானுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு கூடி இருந்த பா.ஜனதா கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று கார் மீது வீசப்பட்ட செருப்பை குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். அதில் “நேற்று என் கார் மீது வீசப்பட்ட செருப்பு பாதுகாப்பாக இருக்கும், செருப்பின் உரிமையாளர் வேண்டுமென்றால் வந்து வாங்கி கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.