தமிழக ராணுவ வீரர் வீரமரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு எல்லையில் ஊடுருவி ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர்.

அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர், ரஜோரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் லட்சுமணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அதோடு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன் என தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார்.

அதே போல் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ₨20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் நாளை தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *