செஸ் ஒலிம்பியாட்: பதக்‍கம் வென்றோருக்‍கு சசிகலா வாழ்த்து!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வைஷாலி, முகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ பிரிவு அணியின் வைஷாலினி, பக்தி குல்கர்னி, தானியா, ஹம்பி ஆகியோருக்கு இதயம் கனித்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து உள்ளார்.

அதே போல் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பி அணியை சேர்ந்த நிஹால், சாத்விக், அதிபன் ஆகியோருக்கு தமது உளம்கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தனிநபர் பிரிவில் இந்திய வீரர், வீராங்களைகள் டி.குகேஷ், நிஹல்சரின் ஆகியோர் தங்க பதக்ககும், அர்ஜூன் எரிகாசி வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும், மகளிர் பிரிவில் வைஷாலி, தானியாசச்தேவ், திவ்யாதேஷ்முக் ஆகியோர் செண்கலப்பதக்கமும் வென்றுள்ளதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வைஷாலி, முகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் எனவும், வாழ்வில் உயரிய நிலையை அடைவதற்கு எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *