வெடி விபத்து: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

சாத்தூர் அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நேன்றைய தினத்தில் சுமார் 12 பேர் ஆலையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஒரு அறையில் மட்டும் சத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஜெயராமன் என்பவர் பட்டாசு வெடித்து கருகிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் அவருடன் பணியாற்றிய புவனேஸ்வரன் என்பவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 பேரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தாக கூறப்படுகிரது.
இந்த சூழலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதோடு ஜெயராமன் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும், படுகாயமடைந்த புவனேஸ்வரன் குடும்பத்திற்கு 1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ளார்.