முழு குணமடைந்தார் தமிழக முதல்வர்!!

உறுதியான தகவல் திமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட சூழலில் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து மீண்டும் அரசு பணிகளில் ஈடுப்பட்டார்.
இதனிடையே தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதியானதாக கடந்த செவ்வாய்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தமிழக முதல்வருக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவரது உடல் நலம் தேரிவருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு குணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னை மாமல்லபுரத்தில் நடைப்பெறும் செஸ் ஒலிம்பியான் போட்டியில் தமிழக முதல்வர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.