மகன்களோடு வசமாக சிக்கிய காமராஜ்: யார் மீது என்னென்ன வழக்குப்பதிவு?

Kamaraj

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஆர் காமராஜ் வீட்டில் மாநில லஞ்ச ஒழிப்பு ஊழல் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவருக்கு நெருக்கமான மைத்துனரும் நகர செயலாளர் ஆர்ஜி குமார், அமைச்சர் மனைவி தங்கை ஆண்டாள், வழக்கறிஞர் உதயகுமார் , ஒன்றிய கவுன்சிலர் ராஜாளி குடிகாடு லோகநாதன் மூவாநல்லூர் ,அறிவழகன் நண்பர் சம்பத்குமர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ராதாகிருஷணன் ,
உள்ளிட்ட 49 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சோதனைக்கான காரணம் மற்றும் யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது.

மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விரிவான விசாரணையின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்களான மருத்துவர்கள் M.K.இனியன், M.K.இன்பன் மற்றும் காமராஜின் நணபர்களான சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *