கனமழை எதிரொலி: கோவை குற்றாலம் செல்வதற்கு தடை!!
கோவை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைபெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலம் அருவில் சீசன் இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து என்பது குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் நீர்வரத்து என்பது அதிகரித்தது.
குறிப்பாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மறு அறிவிப்பு வரும் வரையில் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லையென்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைபெய்ததால் பொள்ளாச்சி அருகே ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் கவி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.