பாஜக திட்டம் தெலுங்கானாவில் நடக்காது – முதல்வர் சந்திரசேகர ராவ்

மகாராஷ்டிரா அரசை போல் தெலுங்கானா அரசை கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டி வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதன் பிறகு நானும் மத்திய அரசை கவிழ்க்க நேரிடும் என முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்க சந்திரசேகர ராவ் செல்லவில்லை.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முன்னதாக இன்று ஹைதராபாத் வந்த நிலையில் அவரை வரவேற்க சந்திரசேகர ராவ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த  சந்திரசேகர ராவ்: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே குடும்பத்தினரை போலவே தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் வாரிசு அரசியல் செய்வதாக கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் அமர்ந்திருக்கும் மத்திய அமைச்சர்கள் மகாராஷ்டிராவை அடுத்து இப்போது தெலுங்கானா தான் என்கிறார்கள்.

அப்படி நடந்தால் அதை நான் வரவேற்கிறேன் அதன் பிறகு நான் சுதந்திரமாக விடுவேன். பின்னர் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும். இதற்காக நானும் காத்திருக்கிறேன்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டில் நடந்த போராட்டங்கள் தவறுதான். அத்தகைய சூழ்நிலையில் நாம் அமைதியாக இருக்கக் கூடாது. இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *