ஒற்றைத் தலைமை விவகாரம்: கட்சி பொறுப்பை மாற்றினார் இபிஎஸ்!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இபிஎஸ் அவர்கள் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தலைமை நிலைய செயலாளர் என மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் முதல் தீர்மானமாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய தேர்தல் குறித்து இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் இது நிராகரிக்கப்பட்டதால் 2 பொறுப்புகளும் காலாவதி ஆகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு வருகின்ற ஜூலை 9-ஆம் தேதி விடுப்பட்ட தேர்தல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைப்பெற உள்ளது.

இதில் 34 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட இருந்த சூழலில் வேட்பாளர்களின் விண்ணப்பத்திற்கு கையெழுத்திட இபிஎஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது இபிஎஸ் அவர்கள் அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு தீவிரம் காட்டி வருவதாக அதிமுக வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *