உள்ளாட்சி இடைத்தேர்தல் -அதிமுக புறக்கணிப்பு !!!
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களுக்கான இடைத்தேர்தல் என்பது நடைப்பெற இருக்கிறது. இதனையொட்டி கட்சியின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
இவற்றை மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களில் போட்டியிடுவதை தவிர்த்து அதிமுக புறக்கணித்துள்ளது. குறிப்பாக தற்போது இருக்க கூடிய காலி பணியிடங்களை பொருத்த வரையில் 2 மாவட்ட கவுன்சிலர்கள் 20 ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் 40 ஊராட்சி தலைவர்களின் பதவிகள் அதே போன்று 436 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 510 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றில் 34 பதவியிடங்களுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் என்பது நடைப்பெறும். மீதம் இருப்பவர்கள் சுயேச்சை சின்னமாக இருப்பதால் தேர்தலை புறக்கணித்துள்ளனர். குறிப்பாக 6 மாவட்ட வார்டுகளில் அதிமுகவினர் போட்டியிடுகின்ற நிலையில் மற்ற வார்டுகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வார்டு கவுன்சிலர்களுக்கு சின்னங்கள் பெற்றுதர வேண்டும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து விண்ணப்பங்களில் கையெழுத்து போடுவதற்கு இபிஎஸ்-யை அனுகியபோது அவர் தரப்பில் இருந்து திட்டவட்டமாக மறுத்துவிட்ட சூழலில் தற்போது அதிமுகவில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.