ஒற்றை தலைமை விவகாரம் களத்தில் இறங்கிய சசிகலா..!!

தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது ஒற்றை தலைமை என்ற ஒற்றை வார்த்தை தான். அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக சசிகலா கூறியுள்ளார்.

அதில் முதல் கட்ட பயணமாக நாளை சென்னையில் இருந்து தொடங்க போவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என அவர் தரப்பில் கூறப்படுகிறது.

Read all Latest Updates on and about Sasikala

அவரின் அறிவிப்பின் படி நாளை ஜூன் 26-ம் தேதி பிற்பகல் சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி சென்று மக்களை சந்திக்கிறார். பின்னர், அங்கிருந்து குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.

அதன்பின் குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ் விஜி புரம், கிருஷ்ணா குப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.

sasikala: சசிகலாவுக்கு எடப்பாடி தரப்பு புதிய நிபந்தனை? தினகரனை சுற்றும்  புகார்! - Samayam Tamil

எம் ஜி ஆர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறேன்பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் தனது இல்லம் வருவார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *