ஓபிஎஸுக்கு ஒருத்தரும் இல்லையா?… எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணி முதலே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் வானகரத்தில் குவிந்து வருவதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், அதிமுக பல்வேறு அணிகளைச் சார்ந்த செயலாளர்கள் என 50 க்கும் மேற்பட்டோருக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிய படியே உள்ளனர். கூடை, கூடையாக மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழக்க, போலீஸ் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் புடைசூழ எடப்பாடி பழனிசாமி மண்டபத்திற்குள் நுழைந்தார். அப்போது வேண்டும், வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் பலூனில் கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.இதேபோல் ஓபன்னீர்செல்வம் வீட்டில் இருந்து புறப்படும் போது, அவரது ஆதரவாளர்கள் தடபுடல் வரவேற்பு அளித்தனர். ஆனால் மண்டபத்திற்குள் ஓபிஎஸ் நுழைந்த போது அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது சலசலப்பை உருவாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *