மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!! சட்டப்பேரவை கலைக்கப்படலாம் சஞ்சய் ராவத் எச்சரிக்கை..!!

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலால் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட உள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து தங்கள் ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் பதிவில் மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக சட்டப்பேரவை கலைக்கும் நிலைக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார்.அவரின் இத்தகைய பதிவு மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *