குடியரசுத் தலைவருக்கான தேர்தல்.. !! கவனம் ஈர்க்கும் திரௌபதி முர்மு செயல்..!!
ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் திரௌபதி முர்மு.
நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
முர்மு கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்மு பெற்றார்.
இந்த பின்னணியுடன் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் களம் காண்கிறார் முர்மு. இந்நிலையில் இன்று காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் தரிசனம் செய்ய சென்ற அவர் கோயில் வளாகத்தை அவரே சுத்தம் செய்தார். சுத்தம் செய்த பின்னர் உள்ளே சென்று தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு கோயில் வளாகத்தை சுத்தம் செய்து வழிபாடு செய்வது போன்ற செயல் அனைவராலும் கவனம் பெற்று வருகிறது.