குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தனி குழு அமைத்த பாஜக..!!

இந்தியாவில் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில் அவரின் பதவி காலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் நிற்க முடியாது என்று சரத்பவார் மறுத்துவிட்டார்.  ஆனால் இதை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அமைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட இந்த 14 பேர்  குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் பணியில் மும்முரம் காட்டி ஒன்றிய அரசு  உத்தரவிட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *