உச்சகட்ட மோதல்… 4வது நாளாக தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்!
சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.
ஒற்றைத்தலைமை பிரச்சினை முடியாத நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.