எம்.எல்.ஏக்களுக்கு கமல் வாழ்த்து!
தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் அகரவரிசைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், “இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.