சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு!
தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின் நடைபெற்றும் முதல் கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் முறையாக பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட கு. பிச்சாண்டி பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகருக்காக போட்டியிடுபவர்கள் மனு கொடுப்பதற்கான கால அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்தது. யாரும் மனு கொடுக்காத நிலையில், சட்டமன்றத்தின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், துணை சபாநாயகராக கு. பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.