ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ல் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது.இதன்மூலம் கடந்த இரண்டு வாரமாக திருவிழா போல காட்சியளித்தது தமிழக தேர்தல் களம்.தற்போது அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும்,தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக் குறைவால் இறந்துள்ளது அந்த தொகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே சில தினங்களாகவே நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.அவரது சார்பாக அவரின் மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இன்று மாதவராவ் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.