மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றவர்கள் கைது

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக தேசிய கட்சி தலைவர்களும் தமிழகம் வந்து செல்கின்றனர். அதன்படி, பாஜகவின் முக்கியத் தலைவகளில் ஒருவரும் பிரதமருமான மோடி இன்று கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்கு சேரிப்பில் ஈடுபட உள்ளார்.

முதலில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு செல்லும் மோடி, அங்கு பரப்புரைகளை முடித்து விட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மேல் தாராபுரத்தில் பாஜகவின் தமிழக தலைவர் எல். முருகனை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.

 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி காட்டி, பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கோவையில் #GoBackFascistModi எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *