வேட்பாளர்களை பல்லக்கில் தூக்கத்தான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன் – கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்வதை பலரும் விமர்சித்து வரும் நிலையில் தற்போது அதற்கான தனது பதிலை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது வேட்பாளர்களை பல்லக்கில் தூக்குவதற்காகத்தான் நான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன் என விளக்கம் அளித்தார்.
இது குறித்து ஏற்கனவே தான் சினிமாவில் உழைத்த பணத்தில்தான் ஹெலிகாப்டரில் பயணிப்பதாகவும், ஊழல் பணத்தில் அல்ல என கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.