புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் படகு சேவையை தொடங்கி வைத்தார்
இந்தியா 75-வது சுதந்திர தினத்தை 75 வாரங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட முடிவு செய்துள்ளது.இதனை பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.இந்த கொண்டாட்டம் அம்ரித மகோத்சவம் என்னும் பெயரில் நடைபெறுகிறது.இதன் ஒரு பதியாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் படகு சேவை,மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.அதன் பின் பேசிய அவர் புதுச்சேரி சுப்ரமணிய பாரதி,பாரதிதாசன் போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்களை புதுச்சேரி நாட்டுக்கு அளித்துள்ளது என பேசினார்.