மியான்மருக்கு உதவியை நிறுத்துகிறதா ஜப்பான்?

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மியான்மர் ராணுவமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறைபிடித்து மியான்மரின் அரசை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

ராணுவம் தனது தரப்பிலிருந்து தேர்தலில் நடைபெற்ற முறைகேடே சிறை பிடிப்பிற்கு காரணம் என்று விளக்கமளித்துள்ளது.ராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.அந்த வரிசையில் ஜப்பானும் தற்போது இணைந்துள்ளது.ஜப்பான் மியான்மருக்கு கொரோனா சமயத்தில் பல்வேறு உதவிகளை அளித்து வந்த நிலையில் மியான்மர் ராணுவத்தின் இந்த செயலானது ஜப்பானின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.மேலும் விரைவில் மியான்மரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.மேலும் ஆங் சாங் சூகி-யையும் விடுவிக்குமாறு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…