அடேங்கப்பா! தினமும் நாவல் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினந்தோறும் நாவல் பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தை சாப்பிடுவது மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதோடு இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு ஒரு கிராம் அளவு தூளை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வரவேண்டும்.
இவ்வாறு செய்வதால் படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். பெண்கள் மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணம் நாவல் பழத்திற்கு உண்டு. நாவல் மரத்தின் பட்டைகளை நன்கு நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி பின் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
பின்னர் தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம். சிலபேருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். காலை, மாலை வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர வேண்டும். அதாவது காலை மாலை என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில் நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்வதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து நாவல் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். மேலும் ரத்தம் சுத்தப்படுத்துவதில் நாவல்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.