ரத்தம் அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிட்டாலே போதும்?

மாதுளை: மாதுளம் பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.. அதுமட்டுமில்லாமல் அயன், கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது.

அத்திப்பழம்: நாம் அன்றாடம் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. குறிப்பாக அத்திப் பழத்தில் அதிகமாக கால்சியல் இருப்பதால் ரத்தம் உற்பத்தி செய்வதற்கு அதிகம் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ரத்தப் போக்கையும் கட்டுபடுத்துகிறது.

கொய்யாப்பழம்: கொய்யாப் பழத்தில் அதிகமாக இரும்பு கால்சியம் பொட்டாசியம் போன்ற நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக கொய்யாப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபின் அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

பேரீச்சை பழம்: பேரிச்சம் பழத்தில் அதிகமான இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது. தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

தர்பூசணி: புத்துணர்ச்சி தரும் தர்பூசணியில் இரும்புச்சத்து மட்டுமில்லாமல் அதிகப்படியான விட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தை குறைத்து இரத்தம் அதிகரிப்பதற்கு மிகவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *