மேகதாது அணைர்: கர்நாடக முதலமைச்சர் விவரம் தெரியாமல் பேசுகிறார் – அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை தொடர்பான பிரச்சனையில் கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா விவரம் தெரியாமல் பேசி வருகிறார் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கே.விகுப்பத்தில் பேட்டி

கே.வி.குப்பம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளரருமான ஏ.பி.நந்தகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தலையிடுகிறது . எங்க மாநிலத்தில் நாங்கள் காட்டுகிறோம் என கர்நாடகா முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கர்நாடகா  முதலமைச்சர் சித்த ராமையா மீது மிகுந்த எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை மதிக்கிறவன். ஆனால் மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியாமல் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு தெரிவிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளதே ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு , எப்பொழுதும்  கர்நாடகா அரசு அப்படி தான் சொல்லி வருகிறார்கள். இன்றைக்கும் அப்படித்தான் சொல்வார்கள்.

தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு. தமக்கு ஒன்றும் தெரியாது என்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறி சென்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *