மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியருக்கு தர்ம அடி  கொடுத்து பாடம் புகட்டிய பெற்றோர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு  கிராமத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் மாணவிகளை ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லகூடாது என மிரட்டி வந்துள்ளார். 

ஆனால் ஆசிரியர்   ராமகிருஷ்ணா பாலியல் தொல்லை தாங்க முடியாத மாணவிகள் இதுகுறித்து  பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர் ராமகிருஷ்ணனை தர்மடி கொடுத்து பாடம் கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து புல்லலசெருவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *