மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த சந்தோஷ் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டுவரப்பட்டது; உறவினர்கள் கதறல்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

கிருஷ்ணகிரி அருகே விஐபி நகரை சேர்ந்தவர் இளங்கோ இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார் இவருக்கு சசி மற்றும் சந்தோஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர் முதல் மகன் சசி கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இரண்டாவது மகன் சந்தோஷ் இன்ஜினியரிங் படித்து மும்பை தலைமையிடமாக கொண்டுள்ள வி எஸ் எல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சந்தோசத்திற்கு திருமணமாகி ரூபி என்கிற மனைவியும், ஆத்வீக் என்கிற 5 வயதில் சிறுவனும், ஆமித்தா என்கிற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் சந்தோஷ் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் விபத்தில் கிரேன் விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர் இதில் பணியில் இருந்த சந்தோஷ் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முந்தினம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதனால் மிகுந்த சோகமாக அவரது குடும்பத்தினர் சந்தோஷ் உடலை காண எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மும்பையில் உடற்கூறாய்வு முடிந்த பிறகு நேற்று இரவு கார்கோ விமானம் மூலம் சந்தோச் பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது அங்கு இருந்து சாலை மார்க்கமாக கிருஷ்ணகிரி விஐபி நகரில் உள்ள அவரின் வீட்டிற்கு ஆலை 7.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டது. 

சந்தோஷம் உடலை பார்த்து அவரது மனைவி தாய் தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர் உறவினர்களும் கண்ணீர் மூழ்க சந்தோஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி அளவில் சந்தோஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *