மணிப்பூர் மாநில, மத்திய அரசை கண்டித்து எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு துணை போகும் மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரேமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில்  மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசையும், இதுவரையில் மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராத மத்திய அரசை கண்டித்தும், கண்டன கோஷம் எழுப்பியதோடு தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோசங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *