மணிப்பூர் இனப்படுகொலையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனப் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை கண்டித்தும், கும்பகோணம் காந்தி பூங்கா முன் இன்று காலை அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இன கலவரத்தை கண்டிக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் , அந்த மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி, மானபங்கப்படுத்திய சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை அடக்காத அந்த மாநில அரசை கலைக்க வலியுறுத்தியும் இன்று காலை கும்பகோணம் காந்தி பூங்கா முன் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.