அமித்ஷாவுக்கு செல்லப் பெயர் வைத்த திரிணாமுல் எம்பி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய  பப்பு என்று குறிப்பிட்டு அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை திரிணாமுல் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வருகிறது. 

அதனால் ஆளுங்கட்சிக்கு, ஒன்றிய பாஜக அரசுக்கு மோதல்கள் அதிகரிப்பதால் மூத்த தலைவர்கள் மத்தியில் பலகட்ட விவாதங்கள் மற்றும் மோதல்கள் தொடர்கின்றன. 

இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் ராஜ்யசபா எம் பி க்களின் அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வந்தார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ யார் என்று கொல்கத்தா மக்களுக்குத் தெரியும். இந்தப் படம் கொல்கத்தாவில் வைரலாகிறது’ என்று பதிவிட்டு அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *