மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்!! போலீசார் வலைவீச்சு!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை ரோடு ரயில்வே ஸ்டேஷனில்தான் இந்த கொலை நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

அதில், வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மனைவியை தரதரவென இழுத்து தள்ளியிருப்பது பதிவாகியிருக்கிறது. சிசிடிவி காட்சியின் படி இந்த கோர சம்பவம் நேற்று (ஆக.,22) அதிகாலை 4.10 மணிக்கு நடந்ததாக பதிவாகியிருக்கிறது.

இந்நிலையில் சுமார் 30 வயதை மதிக்கத்தக்க அந்த நபர், ரயில் நிலையத்தில் உள்ள 5வது பிளாட்பாரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி அவரை தரதரவென இழுத்துச் சென்று அவாத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் வீசியிருக்கிறார்.

இதில், சம்பவ இடத்திலேயே சிதைந்துப்போன நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனை உதவி ரயில்வே போலிஸ் கமிஷ்னர் பஜிராவ் மஹாஜன் தெரிவித்திருக்கிறார். மனைவியை ரயில் வரும் பாதையில் தள்ளி கொன்ற கையோடு, பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அடுத்த கனமே தப்பியோடியிருக்கிறார்.

அந்த நபர் தாடர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்களில் தென்பட்டதாகவும் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொலை நடக்கும் முந்தைய நாள் இரவு கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டைதான் இதற்கு காரணமாக இருக்கிறது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், மனைவியை கொன்ற அந்த கணவர் மீது 302 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *