மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி..!!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினர், கட்சி பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்கிறார். டெல்லி திரும்பும் முன் அவர் தனது தாயாரையும் சந்தித்து வருவார்.
ராகுல் காந்தி, செப்டம்பர் 4 ஆம் தேதி காங்கிரஸ் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையில் அவர்கள் எப்போது புறப்படுகின்றனர். வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் காங்கிரஸ் யாத்திரை தொடங்குகிறார்.
முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முர்மு வுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது.