அசுர வேகத்தில் வந்த கார்: ஒருவர் பலி!!
கடந்த சில நாட்களாகவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (40). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது மனைவி ஆஷாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் குத்திப்புரம் பகுதி அருகே சென்ற போது எதிரே அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று இவர்களின் ஸ்கூட்டரின் மீது அதிவேகத்தில் மோதியது. கார் மோதியதும் ஸ்கூட்டரில் இருந்த கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையில் அந்தரத்தில் பல அடி உயரத்துக்கு பறந்து கீழே விழுந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அப்துல் காதர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆஷாவை அங்கிருந்தவர்கள் கோட்டைக்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.