ராஜஸ்தானில் சோகம்: ஆசிரியர் தாக்கியதில் பட்டியலின மாணவர் பலி..!!
ராஜஸ்தானில் தனியார் பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் தன் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அந்த மாணவன் பரிதாபமாக பலியாகினர்.
ராஜஸ்தான் ஜலூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் எனும் பெயரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் இந்திர குமார் மெக்வால் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் பட்டியலின மாணவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இந்திர குமார் கடும் தாகம் ஏற்பட்டால் வகுப்பிலிருந்து பானையில் குடிநீர் எடுத்துக் குடித்துள்ளார்.
அதன் பின்னர் தான் அப்பனை வகுப்பாசிரியரின் பானை என்பது மாணவருக்கு தெரிந்துள்ளது. இதை அறிந்த இந்திரகுமார் ஆசிரியர் ஹெல்சிங்கி சின்னஞ்சிறு சிறுவன் என்று கூட பாராமல் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் காதுகளின் ஜவ்வுகள் கிழிந்தது டன் கடுமையான ஊமைக் காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை இந்திர குமார் உதய்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. உடனே அருகில் உள்ள குஜராத்தின் அகமதாபாத் மருத்துவமனையில் இந்திர குமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இந்திர குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.