விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் வெற்றி நாட்டின் வெற்றி – நரேந்திர மோடி

இந்திய விளையாட்டின் பொற்காலம் துவங்கி உள்ளது என  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் டெல்லியில், நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

விளையாட்டு வீரர்கள், மோடியுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். மோடி பேசும்போது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், உங்களின் கடின உழைப்பும், சாதனையும் பெருமை அளிக்கிறது.

பதக்கம் வென்றது இளைஞர்களின் சக்தியின் தொடக்கம் மட்டுமல்ல. இந்திய விளையாட்டுகளின் பொற்காலம் தற்போது துவங்கி உள்ளன.கடந்த சில வாரங்களில், விளையாட்டு துறையில் இந்தியா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

Our athletes reflect 'New India', they symbolise nation's future: PM Modi -  The Daily Guardian

செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியில் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி சிறப்பாக செயல் பட்டோம். செஸ் ஒலிம்பியாட் டில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த முறையை விட தற்போது, புதிதாக 4 விளையாட்டுகளில் வெற்றிக்கு வழி வகுத்துள்ளோம். அனைத்து விளையாட்டுகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் திறன் வெளிப்பட்டது. இதன் மூலம் விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *