சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்த 3 மாதங்களில் 2வது முறையாக அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று அறிந்ததும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் சோனியா காந்திக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 2-வது முறையாக அவர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

Sonia Gandhi covid news: Congress president Sonia Gandhi tests positive for  Covid 19 - The Economic Times

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டது அவர் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் டெல்லி கங்காராம் ஆஸ்பத்திரியில் சோனியா காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சோனியா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என அந்த பதிவில் கூறியிருந்தார். 

இந்த வார தொடக்கத்தில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சோனியா காந்திக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *