75 வது சுதந்திர தினம்: நடிகர் விஜய் வீட்டில் பறக்கும் தேசிய கொடி..!

இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் வரும் காரணத்தால் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதன்படி, வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் இருக்கும் நியாய விலை கடைகளில் 20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோடி அழைப்பு ; பின்தொடர்ந்த விஜய் மக்கள் இயக்கம் | nakkheeran

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சமூக வலைதளங்களில் தேச பற்று கொண்டவர்கள் பலரும் தேசியக்கொடியை தங்களது முகப்பு பக்கங்களாக வைத்து வருகின்றனர்.

இதை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் செய்கின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *