ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி வருகிறது – கே.எஸ்.அழகிரி
எதிர்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனை என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் என பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், பாரதத்தை ஒன்றிணைக்க கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணம் சீனாவின் கம்யூனிஸ புரட்சியாளர் சென்ற நடை பயணத்திற்கு இணையானது.
எதிர்க்கட்சிகளை மிரட்டவும், முதலாளிகளை, பத்திரிகையாளர்களை விரட்டவும் மத்திய அரசு அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்.