உத்தர பிரதேசத்தில் பரபரப்பு..!! கதறி அழுத காவலர்..!! காரணம் என்ன..? 

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் ஒருவர் தனக்கு  உண்ண தரமற்ற உணவு  வழங்கப்பட்டது குறித்து அழுது கொண்டு பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீப காலமாக உத்தரபிரதேசத்தில் காவல்துறையினர் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. அதிக நேர வேலை பளு காரணமாக போலீசார் சரியாக உணவு, உறக்கம் இன்றி தவித்து வருவதாக சிலர் கூறினர்.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக உத்தரபிரதேச கான்ஸ்டபிள் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவை காட்டி இதை நாங்கள் எப்படி சாப்பிடுவது, விலங்கு கூட இந்த உணவை உண்ணாது. 

இது குறித்து பல முறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்தோம். ஆனால் ஒரு முறை கூட இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். உதிர் பிரதேச முதல்வர் இதை கருத்தில் கொண்டு எங்களுக்கு நல்ல உணவை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என் அழுது புலம்பினார்.

என் தட்டில் உள்ள உணவை பாருங்கள் இதை மெஸ் அதிகாரியிடம் கேட்டால் அதை அவர் ஏற்கவில்லை என அழுதார்.  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலையை வாங்கிவிட்டு இந்த உணவை எப்படி நாங்கள் எடுத்து கொள்வது என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *