சிறுவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி..!
பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு விதமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் இன்று ரக்ஷா பந்தன் விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டனர். அப்போது மோடிக்கு அந்த சிறுமிகள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்தச் சிறுமிகளுக்கு மூவர்ணக் கொடி களை பரிசாக வழங்கினார். 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. ரக்ஷா பந்தன் விஷயத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு சிறுமிகள் ராக்கி கட்டினர். அந்தச் சிறுமிகளுக்கு மோடி மூவர்ண கொடியை பரிசாகக் கொடுத்து மகிழ்வித்தார்.