ஹரியானா கிளப்பில் ஏற்பட்ட பரபரப்பு: ஐ.டி ஊழியரை தாக்கிய பவுன்சர்கள்..!!

ஹரியானா மாநிலம் குருக்ரம் மாவட்டத்தில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பிற்கு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்கள் குழு ஒன்று வந்துள்ளது.

அப்போது அந்த கிளப்பில் பவுன்சராக இருந்த ஒருவர் அந்த குழுவில் இருந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதற்கு அவருடன் வந்த நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பவுன்சரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த பவுன்சர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அவர்களை வெளியே இழுத்துச் சென்று அனைவரையும் தாக்கியுள்ளனர். 

இதில் அந்த குழுவில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து வாட்ச் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தையும் பவுன்சர்கள் பறித்துள்ளனர்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *