உத்தரப்பிரதேசதில் பயங்கரம் : சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் கார் விபத்து..!

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியில் சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திர சிங் யாதவ் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு லாரி ஒன்று அவரின் கார் மீது மோதியது. மேலும், விபத்துக்குள்ளான காரை 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது. லாரி காரை இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

காருக்குள் இருந்த சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திர சிங் யாதவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்றாலும் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்திருக்கிறது.

விபத்து குறித்து காவல்துறையினர் மணிப்பூர் எஸ்.பி கமலேஷ் தீட்சித், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *