10 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி..! இதன் பெயர் என்ன – கெஜ்ரிவால்

வாக்குகளுக்காக மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாகவும், இலவசங்களால் நாடு முன்னேற்றமடையாது என்றும் பிரதமர் மோடி கூறியது, இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசுகையில் பா.ஜ.க அரசு தன்னுடைய பணக்கார நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதை தேசதுரோகம் அறிவிக்க சட்டம் கொண்டு வரவேண்டும். 

அப்படிப்பட்டவர்களை துரோகிகள் என்று அழைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பது அரசுக்குத் தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. 

சாமான்ய மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்காமல், அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *