குணமடைந்த குரங்கு அம்மை நோயாளி..!! கேரள சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!
இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்து விட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளார். கேரளாவில் கொல்லம் மாவட்டத்தைச் நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 14-ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானது.இதையடுத்து, நாட்டின் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபரான இவருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தற்போது பூரண குணமடைந்து உள்ளனர் என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
இவர்தான் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்பதால், அவருக்கு நோய்த் தொற்று முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதி செய்ய 72 மணி நேரத்தில் இரண்டு முறை சோதனை செய்யுமாறு தேசிய வைரலாஜி மையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அந்த நபருக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு முறையுமே அவருக்கு சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்த நிலையில் அவர் இன்று வீடு திரும்புவார் என்று கேரள சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.