முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்..!!
பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் முகமது ஜுபைர் மத உணர்வுகளுக்கு கலக்கம் விளைவிக்கும் விதமாக பதிவுகளை டிவீட் செய்ததன் காரணமாக அவர் மீது வெவ்வேறு இடங்களில் 6 முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அவர் மீதான 6 வழக்குகளும் ஒரே வழக்குகள் என்பதால் ஒரே வழக்காக மாற்றப்பட்டன. மேலும் அவை டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டன.
மேலும் அவருக்கு உச்சநீதிமன்றம் அனைத்து வழக்குகளில் இருந்து ஜாமீன் வழங்கியுள்ளது. இதில், அவர் டிவீட் செய்வது குறித்து எந்த தடையும் விதிக்கக் முடியாது எனவும், தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.